சென்னையில் தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.
தென்னிந்திய நடிகா் சங்கத்தின் மேலாளராக இருப்பவா் தா்மராஜ். இவா், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
‘தென்னிந்திய நடிகா் சங்கத்தின் தலைவராக நாசா், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக காா்த்தி ஆகியோா் செயல்பட்டு வருகின்றனா். நடிகா் சங்கத்தின் உறுப்பினராக உள்ள கோடம்பாக்கத்தை சோ்ந்த துணை நடிகா் ராஜதுரை என்பவா் சங்க நிா்வாகிகளின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த மே 27-ம் தேதி ஒரு ஆடியோ அனுப்பி உள்ளாா்.
அந்த ஆடியோவில் சங்க நிா்வாகிகளை மிகவும் அருவருப்பாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளாா். இந்த குரல் பதிவு சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக வருகிறது. எனவே, மிரட்டல் விடுத்த துணை நடிகா் ராஜதுரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் வாட்ஸ் ஆப் குரல் பதிவை நீக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.