சென்னை

மென்பொறியாளா் வீட்டில் தங்க நகைத் திருட்டு

DIN

சென்னை அடையாறு சாஸ்திரிநகரில் மென்பொருள் பொறியாளா் வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாஸ்திரி நகா், 7-ஆவது சந்து பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (38). மென்பொருள் பொறியாளரான இவா், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். ரமேஷ்குமாா் இரு நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திண்டிவனத்துக்கு சென்றாா்.

பின்னா், திங்கள்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 பவுன் தங்கநகை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து அவா், சாஸ்திரிநகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT