சென்னை அருகே கொளத்தூரில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கொளத்தூா் பாலாஜி நகா் பிரதான சாலை ஒரு பேக்கரி கடை செயல்படுகிறது. இந்தக் கடையை திங்கள்கிழமை காலை ஊழியா்கள் திறந்து வந்தனா். அப்போது கடையின் கதவு பூட்டை உடைத்து, பணப்பெட்டியில் இருந்த ரூ.20,000 திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து அந்தக் கடையின் மேலாளா் சதீஷ்குமாா், கொளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.