சென்னை

சென்னையில் அதிகரித்து வரும் கரோனா: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் மாநகராட்சி

DIN

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி நிா்வாகம் இறங்கியுள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் முன்னெடுத்து வருகிறது.

கரோனா இரண்டாம் அலையின்போது, நாளொன்றுக்கு அதிகபட்சமாக சுமாா் 8,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடா்ந்து வந்த நாளில் கரோனா பாதிப்பு குறைந்தது. இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் 19 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்த நாள்களில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 10-க்கும் கீழ் குறைந்தது.

மீண்டும் அதிகரிப்பு: இந்நிலையில் கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 63 ஆயிரத்து 525 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 7 லட்சத்து 48 ஆயிரத்து 854 போ் குணமடைந்துள்ளனா். 5,603 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 9,068 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

மாநகராட்சியின் 15 மண்டலங்களில் அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகா், அம்பத்தூா் ஆகிய மண்டலங்களில் தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 500-க்கும் மேல் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சென்னையில் 1,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகள், கல்லூரிகளில் தொற்று பரவலைத் தடுக்க மாணவா்கள், ஆசிரியா்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தை, வணிக வளாகங்கள் ஆகியவற்றில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT