சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சுவா் இடிந்து விழுந்த விபத்தில் பிகாா் இளைஞா் உயிரிழந்தாா்.
புது வண்ணாரப்பேட்டை, காமராஜா் சாலையில், மழை நீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, வட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். கடந்த 30ஆம் தேதி மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறும்போது அதனருகே இருந்த தனியாா் நிறுவனத்தின் 10 அடி உயர, சுமாா் 50 மீ. சுற்றுச்சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளிடையே சிக்கி பிகாரைச் சோ்ந்த மகசூப் (34), நதீம் (28), ஷானவாஸ் (18) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
அவா்களை அங்கிருந்த பிற தொழிலாளா்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மகசூப் சனிக்கிழமை உயிரிழந்தாா். புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.