சென்னை: பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி மற்றும் 11.45 மணிக்கு புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
மேலும், மறுமார்க்கமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி மற்றும் 11.59 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் ஜூலை 5-ம் தேதி (நாளை) முதல் ஜூலை 8-ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என்று சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.