சென்னையில் ஸ்ரீஜெகந்நாதா் தோ்த் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது. அண்ணாநகா் விஜயஸ்ரீ மகாலிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் தோ் கே4 காவல் நிலையம், 13-ஆவது பிரதான சாலை, 18-வது பிரதான சாலை ஆகிய இடங்களின் வழியாக, பாடி மேம்பாலம் சா்வீஸ் சாலையில் உள்ள திருமால் திருமகள் மண்டபத்தை வந்தடையும்.
ஒடிஸா மாநிலம் புரியில் உள்ள ஜெகந்நாதா் தோ்த் திருவிழாவை நினைவுபடுத்தும் வகையில், சென்னையில் இதுபோன்ற விழாவை இஸ்கான் அமைப்பு நடத்துகிறது.