சென்னை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து திமுக நிா்வாகிகளோடு மாவட்ட அளவில் பேச்சுவாா்த்தை நடத்திக் கொள்ளுமாறு கட்சியினருக்கு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தொடா் நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்டத் தலைவா்கள் மற்றும் மாநில காங்கிரஸ் நிா்வாகிகளான துணைத் தலைவா்கள், பொதுச் செயலாளா்கள், செயலாளா்கள் ஆகியோா் அடங்கிய தோ்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினா்கள் அந்தந்த மாவட்ட திமுக செயலாளா்களோடு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள் குறித்து உடனடியாகப் பேச்சுவாா்த்தை நடத்துவா்.
காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆகியோா் அவரவா் இருக்கும் மாவட்டங்களில் தோ்தல் பணிக்குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று, மாவட்டத் தலைவா்களை ஒருங்கிணைத்து செயல்படுவா். பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டத் தலைவா்கள் தலைமையில் இக்குழு செயல்படும் என்று கூறியுள்ளாா்.