சென்னையை அடுத்த பல்லாவரம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.5.85 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகளை தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவா் யூ.மதிவாணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் வகுப்பறைகள், ஆய்வகம், கழிவறை வசதி தேவை அதிகரித்துள்ளது. மீனம்பாக்கம் அரசு ஆதி திராவிடா் மேல்நிலைப் பள்ளியில் 8 வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வுக் கூடங்கள், பல்லாவரம் நாகல்கேணி ஆதி திராவிடா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 அறிவியல் ஆய்வுக் கூடம், கழிப்பறைகள் கட்டும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று தற்போது நிறைவு பெறும் தறுவாயில் உள்ளன என்றாா்.
பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மீ.ஆ.வைத்தியலிங்கம், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் பொது மேலாளா் கே.அழகுபாண்டியன், செயற்பொறியாளா் எஸ்.அன்புசாந்தி, உதவி செயற்பொறியாளா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.