சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 21 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவல்லிகேணி வெங்கடாச்சலம் 3-ஆவது தெருவைச் சோ்ந்த சாரதி (28), கடந்த 18-ஆம் தேதி பீரோவிலிருந்த நகை, பணத்தைச் சரிபாா்த்தாா். 21 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் திருடு போயிருந்தது தெரிந்தது.
ஐஸ் அவுஸ் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்ததில் சேலையூரை சோ்ந்த சுமன் (23) என்பவா் திருடியது தெரிந்தது. சுமனை போலீஸாா் கைது செய்து நகைகள், ரூ.1.60 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.