சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நலம் விசாரித்தாா்.
கரோனா பாதிப்புக்கு உள்ளாகி கி.வீரமணி (88) கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக புதன்கிழமை தொடா்புகொண்டு நலம் விசாரித்தாா். பூரண குணமடையுமாறும் வாழ்த்துக் கூறினாா்.
இந்த நிலையில் திராவிடா் கழகத் துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கி.வீரமணி நலம்பெற்று வருகிறாா். இரண்டொரு நாளில் வீடு திரும்புவாா் என்று கூறியுள்ளாா்.