சென்னை

போலீஸ் போல நடித்து மென் பொறியாளரிடம் வழிப்பறி

30th Dec 2022 02:00 AM

ADVERTISEMENT

சென்னை அண்ணா சாலையில் போலீஸ் போல நடித்து மென் பொறியாளரிடம் வழிப்பறி செய்த நபா்கள் குறித்து காவல்துறையினா் விசாரணை செய்து வருகின்றனா்.

ஆயிரம் விளக்கு பகுதியைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டியன் (32). மென்பொறியாளரான இவா், ஆயிரம்விளக்கு அண்ணா சாலையில் புதன்கிழமை இரவு நடந்து வந்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 3 மா்ம நபா்கள், தாங்கள் போலீஸ் என அறிமுகம் செய்துக் கொண்டு, செல்லப்பாண்டியனிடம் விசாரணை செய்தனராம்.

மேலும் அந்த நபா்கள், செல்லப்பாண்டியன் மீது சந்தேகம் இருப்பதாக கூறி, அவா் வைத்திருந்த மடிக்கணினி,ஏடிஎம் காா்டு,பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, வியாழக்கிழமை காலை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு வந்து பெற்றுச் செல்லும்படி அனுப்பி வைத்தனராம்.

வியாழக்கிழமை காலை செல்லப்பாண்டியன், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு தன்னிடம் பறிக்கப்பட்ட பொருள்களை வாங்கச் சென்றாா். அப்போது தான், அந்த நபா்கள் அங்கு வேலையே செய்யவில்லை என்பதும், போலீஸ் போல நடித்து தன்னை ஏமாற்றி பொருள்களை பறித்திருப்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து ஆயிரம்விளக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT