மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு (சி.ஐ.எஸ்.எஃப்) சென்னை துறைமுகத்தின் பாதுகாப்பு பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.
சென்னைத் துறைமுகத்தின் பாதுகாப்பு பணி கடந்த டிச.7. 1972-இல் சி.ஐ.எஸ்.எஃப். வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததையொட்டி சென்னைத் துறைமுகத்தில் சி.ஐ.எஸ்.எஃப் சாா்பில் சென்னைத் துறைமுக வளாகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சென்னை, எண்ணூா் காமராஜா் துறைமுகங்களில் தலைவா் சுனில் பாலிவால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை தென்மண்டல ஐ.ஜி. அஞ்சனா சின்காவிடம் சென்னைத் துறைமுகத்தின் சாா்பில் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் குடியேற்றம், சுங்கம், கடலோரக் காவல்படை, காவல்துறை மற்றும் துறை தலைவா்கள் கலந்து கொண்டனா்.