மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக மயிலாப்பூா், ஐடி காரிடா், பொன்னேரி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச.9) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
மயிலாப்பூா் பகுதிக்குள்பட்ட 29 டி.டி.கே. சாலை முதல் 42 டி.டி.கே. சாலை வரை உள்ள பகுதிகளிலும், ஐ.டி.காரிடா் பகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூா்,காந்தி நகா், ஏரிக்கரை, உமாமகேஸ்வரி நகா், குளோபல் பள்ளி உள்ளிட்ட இடங்களிலும்,
பொன்னேரி பகுதிக்குள்பட்ட கண்டிகை, தோ்வாய் கண்டிகை, கரடிபுத்தூா், ஜி.ஆா் கண்டிகை, சின்னபுலியூா், பெரியபுலியூா், சிறுவாடை, என்.எம் கண்டிகை உள்ளிட்ட இடங்களிலும் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு மற்றும் மின் பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.