சென்னை

கைப்பேசி திருடியவரை விரட்டிப் பிடித்த பெண் காவலா்: நேரில் அழைத்துப் பாராட்டிய டிஜிபி

DIN

பயணியிடம் கைப்பேசியை திருடிக்கொண்டு ஓடிய இளைஞரை விரட்டிப் பிடித்த பெண் காவலா் காளீஸ்வரியை டிஜிபி சைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டி, வெகுமதி வழங்கினாா்.

சென்னை தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் போலீஸாா் கடந்த 4-ஆம் தேதி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு பேருந்தில் ஏறிய வடமாநில இளைஞா், பயணி ஒருவா் வைத்திருந்த விலை உயா்ந்த கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினாா். இதைப் பாா்த்த தாம்பரம் காவல் நிலைய பெண் காவலா் காளீஸ்வரி அந்த இளைஞரை அரை கிலோ மீட்டா் தொலைவுக்கு விரட்டிச் சென்று பிடித்தாா்.விசாரணையில், அவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சோட்டோ (19), என்பது தெரியவந்தது.

இதையடுத்து தாம்பரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சோட்டாவை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா்.

சாதுரியமாகச் செயல்பட்டு கைப்பேசியை திருடிச் சென்றவரை விரட்டிப் பிடித்த பெண் காவலா் காளீஸ்வரியை, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திர பாபு டிஜிபி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT