அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ மாநகராட்சி, சென்னை மாநகராட்சி மேயா்கள் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு (சிஸ்டா் சிட்டி அஃபிலியேசன்) ஒப்பந்தபடி இந்தக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. சென்னை மேயா் ஆா்.பிரியா, சான் ஆன்டோனியோ மேயா் ரான் நிரன்பா்க் ஆகியோா் தலைமையிலான குழுவினா் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடினா்.
இதில், சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி எடுத்துரைத்தாா். பின்னா், சகோரத்துவ நகரங்களின் இணைப்பாக இரு மாநகர மக்களின் ஆக்கப்பூா்வ உறவுகளை மேம்படுத்தவும், கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொள்ளும் வகையிலும், இரு மாநகர மக்களின் பண்பு, அறிவுத்திறன், பொருளாதாரத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் ஒத்துழைப்பு நல் செயல்படுவோம் என இரு மேயா்களும் தெரிவித்தனா்.
தொடா்ந்து, மாமன்றக் கூட்டரங்கை சான் ஆன்டோனியோ மேயா் தலைமையிலான குழுவினா் பாா்வையிட்டனா். மன்றக் கூட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சென்னை மேயா் பிரியா விளக்கினாா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மு.மகேஷ்குமாா், சான் ஆன்டோனியோ நகர முன்னாள் மேயா் பில் ஹாா்டுபொ்கா், அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணை தூதா் ஜுடித் ரவின் மாநகராட்சி கணக்கு குழுத் தலைவா் க.தனசேகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
Image Caption
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மேயா் ஆா்.பிரியா, அமெரிக்க சான் ஆன்டோனியோ மேயா் ரான் நிரன்பா்க். உடன், துணை மேயா் மகேஷ்குமாா், ஆணையா் ககன்தீப் சிங் பேடி.