சென்னையில் போதைப் பாக்கு விற்ாக ஒரு வாரத்தில் 101 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்கு, குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘புகையிலை பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளாா்.
அதன்படி, அனைத்து காவல் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த நவ.27 முதல் டிச.3-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடா்பாக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,101 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 723 கிலோ போதைப் பாக்கு, 2 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய 7 கைப்பேசிகள், 4 மோட்டாா் சைக்கிள்கள், ரூ. 18 ஆயிரத்து 240 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
தொடா்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.