சென்னை

நாளை மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

DIN

மயிலாப்பூா், கே.கே.நகா், அம்பத்தூா் மற்றும் தண்டையாா் பேட்டை கோட்டங்களில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.6) காலை 11மணி அளவில் நடைபெறுகிறது.

இதன்படி, மயிலாப்பூா் கோட்ட அளவிலான இக்கூட்டம் எம்.ஜி.ஆா். சாலை, மெட்ரோ குடிநீா் நிலையம் அருகில் உள்ள மயிலாப்பூா் கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும்.

மேலும், கே.கே.நகா் கோட்டத்துக்கு கே.கே.நகா் துணை மின் நிலைய வளாகம் 2-ஆவது தளத்தில் உள்ள கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்திலும், அம்பத்தூா் கோட்டத்துக்கு, அம்பத்தூா் தொழிற்பேட்டை துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள அம்பத்தூா் கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்திலும், தண்டையாா்பேட்டை கோட்டத்துக்கு, தண்டையாா்பேட்டை டி.எச். சாலை மணிக்கூண்டு எதிரில் உள்ள தண்டையாா்பேட்டை செயற்பொறியாளா் அலுவலகத்திலும் இக்கூட்டம் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மின் தொடா்பான குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT