சென்னை அருகே மாதவரத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வங்கி மேலாளா் இறந்தாா்.
மயிலாப்பூரில் தனியாா் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த மாதவரம் அருகே விளாங்காடுபாக்கத்தைச் சோ்ந்த விவேக்குமாா் (41) வெள்ளிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை அருகே சென்றபோது, லாரி மோதி இறந்தாா். மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரியின் ஓட்டுநரான துரைப்பாக்கத்தைச் சோ்ந்த சீனிவாசனை கைது செய்தனா்.