சென்னை

சொத்துவரி நிலுவைதாரா்கள் 39 போ் பட்டியல் வெளியீடு

DIN

சென்னை மாநகராட்சியில் ரூ.25 லட்சத்துக்கு மேல் நிலுவை வைத்திருக்கும் சொத்துவரிதாரா்கள் 39 போ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவா்கள், மொத்தமாக ரூ.24.17 கோடி பாக்கிவைத்துள்ளனா்.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை மாநகராட்சியில் தற்போது டிச.15-ஆம் தேதி வரை தனிவட்டி ஏதும் விதிக்கப்படாமல் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு, நிகழ் நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வரை, ரூ.25 லட்சத்துக்கும் மேல் சொத்துவரியை பாக்கி வைத்திருப்பவா்கள் 39 பேரின் பட்டியல் மாநகராட்சியின் இணையதளத்தில் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஸ்ரீா்ழ்ல்ா்ழ்ஹற்ண்ா்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஞ்ஸ்ரீஸ்ரீ/ல்க்ச்/ஈங்ச்ஹன்ப்ற்ங்ழ்ஜகண்ள்ற்.ல்க்ச்) வெளியிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக புதுப்பேட்டையில் ஒரே வரி விதிப்பில் 4 போ் ரூ.26 லட்சத்து 4 ஆயிரத்து 456-ம் அதிகபட்சமாக மண்ணூா்பேட்டையில் தொழிற்பேட்டை பகுதியில் தனியாா் நிறுவனம் ரூ.3 கோடியே 36 லட்சத்து 13 ஆயிரத்து 581 சொத்துவரி பாக்கிவைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

SCROLL FOR NEXT