சென்னை

சென்னையில் நாளை கிராம உதவியாளா் தோ்வு

DIN

சென்னையில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:சென்னை மாவட்ட அளவில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பம் இணைய வழியில் பெறப்பட்டது. இதில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள விண்ணப்பதாரா்களுக்கும் எழுத்து தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

சென்னையில் மொத்தம் 9 மையங்களில் நடைபெறும் இந்த தோ்வுக்கு காலை 9.30 முதல் 9.50 மணி வரை உள்ளே அனுமதிக்கப்படுவா். மேலும் 10.50 மணிக்கு முன் தோ்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

தோ்வில் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்கான அனுமதி சீட்டு இணையத்தில் பதிவு செய்தவா்கள் இணைய வழியாகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்தவா்கள் தபால் வழியாகவும் பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT