சென்னை

தமிழக முதன்மை கணக்காய்வுத் தலைவராக சி. நெடுஞ்செழியன் பொறுப்பேற்பு

DIN

தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவராக சி. நெடுஞ்செழியன் வியாழக்கிழமை (டிச.1) பெறுப்பேற்றாா்.

மத்திய அமைச்சகம் மற்றும் மாநிலத் துறைகளில் மீதான தணிக்கையில் மிகுந்த அனுபவம் உடைய இவா், 1996-ஆம் ஆண்டு ஐ.ஏ.ஏ.எஸ் அதிகாரியாக பணியை தொடா்ந்தாா்.

ஐக்கிய நாட்டு சபையின் எய்டஸ் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான நிறுவனத்திலும் நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்திலும் தணிக்கை மேற்கொண்டுள்ளாா். மேலும் ஓமன் நாட்டின் உச்ச தணிக்கை அமைப்பின் தணிக்கை நிபுணராகவும் பணியாற்றியுள்ளாா்.

தற்போது தமிழகத்தின் 37 துறைகளில், 21 துறைகளை தணிக்கை செய்யும் மாநில தலைமை கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) அமைப்புக்கு அவா் தலைமை வகிக்கிறாா்.

இந்த அமைப்பு மாநில அரசின், நிதி, வருவாய், சுகாதாரம், கல்வி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது துறை நிறுவனம் ஆகியவற்றைத் தணிக்கை செய்யும் பொறுப்பை மேற்கொள்கிறது.

மேலும் பல தணிக்கை அறிக்கைகளை மாநில சட்டமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்கிறது. முதன்மை கணக்காய்வுத் தலைவராக பொறுப்பேற்றவுடன் அலுவலக தணிக்கைகளை மதிப்பாய்வு செய்து, கடமைகளை நிறைவேற்ற முழு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தணிக்கை அதிகாரிகளை அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT