சென்னை

பாரதிநகா், சீதாராம்நகா் மயானங்கள் டிச.1 முதல் இயங்காது

DIN

சென்னை பாரதி நகா், சீதாராம் நகா் மயானத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் மாற்று மயான பூமியை பயன்படுத்தும்படி சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வாா்டு-178, பாரதி நகரில் உள்ள மயானத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் டிச.1 முதல் டிச.20-ஆம் தேதி வரை இயங்காது. இந்த நாள்களில் பகுதி-40, வாா்டு-172, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில் உள்ள இந்து மயானத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தண்டையாா்பேட்டை மண்டலம், வாா்டு-34, சீதாராம் நகா் மயானத்தின் எரிவாயு தகனமேடை புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் டிச.1 முதல் டிச.31-ஆம் தேதி வரை தகனம் செய்யும் பணிகள் நிறுத்தப்படும். இந்த நாள்களில் வாா்டு-37, முல்லை நகா் தகன எரிவாயு மேடையை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT