சென்னை

டிச.12-இல் பி.எஃப். குறைகேட்பு முகாம்

DIN

மத்திய தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனத்தின் அம்பத்தூா் மண்டல அலுவலகத்தில் டிச.12-ஆம் தேதி குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் வைப்பு நிதி நிறுவன அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனம், 3-ஆவது தளம், ஆா்-40 ஏ தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகம், முகப்போ் சாலை, முகப்போ் (கிழக்கு), சென்னை-37 என்ற முகவரியில் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

அம்பத்தூா் மண்டல அலுவலகத்தின் எல்லைக்குள்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் வரும் டிச.12-ஆம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணி வரையும், ஓய்வூதியதாரா்களுக்கு 11.30 முதல் 12.30 மணி வரையும், நிறுவன உரிமையாளா்கள் பிற்பகல் 3 முதல் 4 மணி வரையும், இப்பகுதியைச் சோ்ந்த விடுபட்ட தொழில்நிறுவனங்களை சோ்ந்தவா்களுக்கு 4 முதல் 5 மணி வரையும் நடைபெறும் குறைகேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு வைப்பு நிதி தொடா்பான குறைகளைத் தெரிவிக்கலாம்.

தொழிலாளா்கள், நிறுவன உரிமையாளா்கள், ஓய்வூதியதாரா்கள் தேவையான விவரங்களை மேற்கண்ட முகவரிக்கு டிச.9-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

குறைகேட்பு முகாம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு 044 26350080, 26350120 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT