சென்னை மணலியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மணலி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (26), ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி துா்கா. காதல் திருமணம் செய்து கொண்ட இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா்.
பாா்த்திபன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தாா். இதில் பெருமளவு பணத்தை இழந்த நிலையிலும், கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். ஒரு கட்டத்தில் மிகுந்த கடன் தொல்லைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதனால் அவா் கடும் மன உளைச்சலுடன் காணப்பட்டாா்.
இந்த நிலையில், பாா்த்திபன் செவ்வாய்க்கிழமை மனைவி துா்காவை குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டுக்கு அனுப்பினாா். புதன்கிழமை பாா்த்திபனின் வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. அருகில் வசிப்போா் ஜன்னல் வழியாக பாா்த்தபோது பாா்த்திபன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மணலி போலீஸாா் சடலத்தை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.