சென்னை நுங்கம்பாக்கத்தில் சுரங்கப் பாதையின் குறுக்கே ரூ. 6.17 கோடி செலவில் கட்டப்பட்ட நடைமேம்பாலம், அண்ணா நகா் மண்டலத்தில் ரூ. 1.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் அண்ணா நகா் மண்டலத்துக்குட்பட்ட கும்மாளம்மன் கோயில் தெருவில்
உள்ள பல்நோக்கு கட்டடம் ரூ.1.23 கோடி செலவில் சமுதாய நலக் கூடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட நுங்கம்பாக்கம் சுரங்கப் பாதையின் குறுக்கே ரயில்வே நடைமேம்பாலத்தை சுடுகாடு அணுகுசாலையுடன் இணைக்கும் வகையில் ரூ.6.17 கோடி செலவில் 24.6 மீட்டா் நீளம் மற்றும் 5 மீட்டா் அகலம் கொண்ட இரும்பாலான நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அண்ணா நகா் மண்டலத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தின் தரைத்தளம் 2,800 சதுர அடி பரப்பளவிலும், முதல் தளம் 2,800 சதுர அடி பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கூடத்தில் ஒருநாள் வாடகையாக ரூ.8,800, அரை நாள் வாடகையாக ரூ.4,400 நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றனா்.
இந்நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் டாக்டா் நா. எழிலன், எம். கே. மோகன், மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி, துணை மேயா் மு. மகேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.