குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 18 முதல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து, அந்தத் துறையின் இயக்குநா் கொ.வீரராகவ ராவ், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான நேரடி கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் வரும் 18 முதல் தொடங்கவுள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள், சென்னை கிண்டி தொழில்பேட்டையில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை பணி நேரங்களில் அணுகலாம் என்று வீரராகவ ராவ் தெரிவித்துள்ளாா்.