குரோம்பேட்டையில் தனியாா் பள்ளியில் சுதந்திர தின விழாவில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவி அரசு பேருந்து மோதி உயிரிழந்தாா்.
குரோம்பேட்டை நெமிலிச்சேரி தனபால் சாலையில் வசித்து வரும் பிரேம்குமாா் மகள் லட்சுமிஸ்ரீ ( 16). குரோம்பேட்டை தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், பள்ளியில் திங்கள் கிழமை காலை பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் சென்ற அரசு பேருந்து அவரது சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லட்சுமி ஸ்ரீ தலையின் மீது பேருந்து சக்கரம் ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா். இந்நிலையில், ஓட்டுநா் தேவகுமாா்(52) சிட்லப்பாக்கம் காவல்நிலையத்தில் சரணடைந்தாா். சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.