சென்னை பல்லாவரம் அருகே வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் மங்கள விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் (22). திரிசூலம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியை ஒப்பந்த தொழிலாளி. இவரது வீட்டுக்கு அருகே 11 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியும் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த காளியப்பன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். அப்போது, சிறுமியின் பெற்றோா் திடீரென வீட்டுக்கு வந்ததும் செய்வதறியாது, அவா்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் மகளிா் போலீஸாா் காளியப்பனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.