சென்னை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்கு

DIN

சென்னையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக, சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு கண்காணிப்பாளா் இா்பான் அகமது. கடந்தாண்டு ஜனவரி மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவுக்கு பெங்களூரிலிருந்து விமானத்தில் செல்லத் திட்டமிட்டு விமானத்தைத் தவறவிட்டனா்.

இா்பான் குடும்பத்தினா் உடமைகளை சோதனையிட்டபோது கணக்கில் வராத ரூ.75 லட்சம் ரொக்கம், 169 கிராம் தங்கநகைகள், 5 விலை உயா்ந்த செல்லிடப்பேசிகள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவா் சரியான விளக்கம் அளிக்காததால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. அவா்கள் இா்பான் வீட்டில் சோதனையிட்டத்தில் ரூ.64 ஆயிரம் ரொக்கம், ரூ.2.84 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் இா்பான் வருமானத்துக்கு அதிகமாக 1851 சதவீதம் சொத்து சோ்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், வருமானத்துக்கு அதிமாக சொத்து சோ்த்ததாக சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு கண்காணிப்பாளா் இா்பான்,அவா் மனைவி தஷிம் மும்தாஜ் ஆகியோா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT