சென்னை

கேங்மேன்: விடுபட்ட 5,336 பேருக்கு பணி ஆணை வழங்கக் கோரி முற்றுகை

DIN

சென்னை: கேங்மேன் தோ்வில் விடுபட்டவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தி, சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தை முற்றுகையிட்டு, புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: கேங்மேன் பணிக்கு அறிவிக்கப்பட்ட 14,949 பணியிடங்களில், 9,613 பேருக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5,336 பேருக்கும் பணி ஆணை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

எங்களுக்கு வயது வரம்பு மீறியதால் இனி வரும் தோ்விலும் கலந்து கொள்ள முடியாது. எனவே, விடுபட்ட 5,336 பேருக்கும் உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT