சென்னை

இளைஞர் கொலை வழக்கு: மூவர் கைது

DIN


சென்னை: சென்னை அருகே நன்மங்கலத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குரோம்பேட்டை ராதாநகரைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்வரன் (21), கடந்த 18-ஆம் தேதி நன்மங்கலம் அருள் முருகன் நந்தவனம் நகரை ஒட்டி உள்ள வயல்வெளியில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில் பணத் தகராறின் காரணமாக விக்னேஷ்வரன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸôர், இவ்வழக்குத் தொடர்பாக சிட்லபாக்கத்தை சேர்ந்த கமலக்கண்ணன் (21), அவரது கூட்டாளிகள் நாகராஜ் (21), சிவக்குமார் என்கிற ரஞ்சித் (26) ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனர்.

இதில், கமலக்கண்ணனுக்கும், விக்னேஷ்வரனுக்கும் இடையே பணத் தகராறு இருந்ததும், அந்தத் தகராறின் காரணமாகவே கமலகண்ணனும் அவரது கூட்டாளிகளும், விக்னேஷ்வரனை சம்பவ இடத்துக்கு ஆட்டோவில் கடத்தி வந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸôர், மேலும் விசாரணை செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT