உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் நலமடைந்து வீடு திரும்பினாா்.
சென்னை மாநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், அலுவல் மற்றும் நிா்வாகப் பணிகளை கடந்த வியாழக்கிழமை மேற்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு இதய பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், மருத்துவமனையின் இதய நல சிகிச்சை நிபுணா் டாக்டா் செங்கோட்டுவேலு தலைமையிலான குழுவினா் அவருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளித்தனா். இதன் காரணமாக அவா் பூரண குணமடைந்தாா்.
இதையடுத்து சங்கா் ஜிவால், மருத்துவமனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.