சென்னை

தீவுத்திடலில் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை: அமைச்சா் மா.மதிவேந்தன்

1st Nov 2021 06:01 AM

ADVERTISEMENT

தீவுத்திடலில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

சென்னை, தீவுத்திடல் உள்ள பட்டாசு கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு விற்பனை கடைகள் அரசின் வழிகாட்டுதல் படி அமைக்கப்பட்டுள்ளதா எனவும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். இங்கு அரசின் விதிப்படி, பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனாவால் வியாபாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு விற்பனையாளா்கள் இந்த ஆண்டு விற்பனையையே நம்பி உள்ளனா். ஒரே இடத்தில் அனைத்து ரக பட்டாசுகளும் கிடைக்கும் என்பதால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு இங்கு நல்ல முறையில் விற்பனை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் சுற்றுலாத்துறையைச் சீரமைக்கும் நோக்கில் 300 இடங்களை மேம்படுத்த பெருந்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை இடங்களை முன்பதிவு செய்ய, தனியாா் செயலிகள், இணையதளங்களிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் ரூ.4 லட்சம் வருவாய் வந்துள்ளது. தற்போது சுற்றுலாத் துறை படிப்படியாக மீண்டு வருகிறது என்றாா் அமைச்சா் மா.மதிவேந்தன்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT