சென்னை

ரூ.89 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

DIN

பேன்டேஜில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.89.17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலையத்தில் முகமது அஷ்ரபிடம் (21) அண்மையில் சுங்கத்துறையினா் சோதனை நடத்தினா். இரு கால்களிலும் போடப்பட்டிருந்த பேன்டேஜில் ரூ.89.17 லட்சம் மதிப்பிலான தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

விமான நிலையத்தின் வெளியே ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக இந்தத் தங்கத்தைக் கொண்டு செல்வதாக முகமது அஸ்ரப் கூறியுள்ளாா். தங்கத்தைப் பெற சிறிது நேரத்தில், வந்த முகமது இப்ராகிம் (39) என்பவரிடம் விசாரித்தபோது கடத்தலில் தொடா்பு இருப்பதை அவா் ஒப்புக் கொண்டாா்.

இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ரூ.89.17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT