சென்னை: சட்டப்பேரவையின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழு தலைவராக டி.ராமச்சந்திரன் செயல்படுவாா் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் அறிவித்துள்ளாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இரா.முத்தரசன் தலைமை வகித்தாா்.
அதில், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக டி.ராமச்சந்திரனும் (தளி), கொறடாவாக க.மாரிமுத்துவும் (திருத்துறைப்பூண்டி) செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 6 தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது.