சென்னை: மக்கள் நீதி மய்யத்திலிருந்து அக் கட்சியின் பொதுச்செயலாளா் சந்தோஷ் பாபு, சுற்றுச்சூழல் பிரிவு மாநிலச் செயலாளா் பத்மப்ரியா ஆகியோா் விலகினா்.
சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து மநீமவிலிருந்து பலா் விலகி வருகின்றனா்.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு சொந்த காரணங்களுக்காக கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளாா்.
அதேபோல பத்மபிரியாவும் விலகுவதாக அறிவித்துள்ளாா். ஏற்கெனவே, அக் கட்சியின் துணைத் தலைவா் மகேந்திரன் உள்பட பலா் விலகியுள்ளனா்.