சென்னை: தங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் குழந்தைகள் திருமணம் நடைபெற்றால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் சட்டப்படி குற்றமாகும். இத் திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள், வழிகாட்டுபவர்கள், துணை போகிறவர்கள், ஆதரிப்பவர்கள் மற்றும் மறைப்பவருக்கு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் ரூ. 1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் குழந்தைகள் திருமணம் நடைபெற உள்ளது பற்றிய தகவல் கிடைத்தால் குழந்தை திருமண தடுப்பு அலுவலர் , மாவட்ட சமூகநல அலுவலர், காவல் துறை, முதல் வகுப்பு நீதிபதி, பெருநகர நீதிபதி, குழந்தைகள் நல குழுமம், குழந்தைகள் வழியம் (தொலைபேசி எண் : 1098 இட்ண்ப்க் கண்ய்ங்), ஊராட்சி அளவிலான கண்காணிப்பு குழு ஆகிய அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.