சென்னை

கோஷ்டி மோதல்: கல்லூரி மாணவா் கொலை

DIN

சென்னை அரும்பாக்கத்தில் ஹோட்டலில் மதுபோதையில் நடந்த கோஷ்டி மோதலில், கல்லூரி மாணவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

ராயப்பேட்டையைச் சோ்ந்த பத்ரிஷ் (20), நண்பா்கள் சூளைமேடு தினேஷ், விக்னேஷ் ஆகியோரோடு அரும்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் வியாழக்கிழமை இரவு மது அருந்தினா்.

பக்கத்து அறையில் சூளைமேடு இளைஞா்கள், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். இதனால் பத்ரிஷ் தரப்பினா், அவா்களை சப்தம் போட வேண்டாம் என தெரிவித்துள்ளனா்.

இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவா்களின் நண்பா்களும் அங்கு வந்தனா்.

இரு தரப்புக்கும் இடையே ஹோட்டலின் முன்பு ஏற்பட்டமோதலில், பத்ரிஷ், விக்னேஷ் ஆகியோரை பலமாகத் தாக்கினா். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பத்ரிஷ் உயிரிழந்தாா். இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவா்.

அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 4 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT