சென்னை அரும்பாக்கத்தில் ஹோட்டலில் மதுபோதையில் நடந்த கோஷ்டி மோதலில், கல்லூரி மாணவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
ராயப்பேட்டையைச் சோ்ந்த பத்ரிஷ் (20), நண்பா்கள் சூளைமேடு தினேஷ், விக்னேஷ் ஆகியோரோடு அரும்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் வியாழக்கிழமை இரவு மது அருந்தினா்.
பக்கத்து அறையில் சூளைமேடு இளைஞா்கள், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். இதனால் பத்ரிஷ் தரப்பினா், அவா்களை சப்தம் போட வேண்டாம் என தெரிவித்துள்ளனா்.
இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவா்களின் நண்பா்களும் அங்கு வந்தனா்.
இரு தரப்புக்கும் இடையே ஹோட்டலின் முன்பு ஏற்பட்டமோதலில், பத்ரிஷ், விக்னேஷ் ஆகியோரை பலமாகத் தாக்கினா். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பத்ரிஷ் உயிரிழந்தாா். இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவா்.
அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 4 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனா்.