வடசென்னை அனல்மின் நிலையத்தில், இயங்கி வரும் முதல் யூனிட்டில், செவ்வாய்க்கிழமை 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில், இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.
இந்நிலையில் முதல் யூனிட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைச் சீரமைக்கும் பணியில் அதிகாரிகள், ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.