சென்னையில் கழிவுநீா்க் கால்வாய் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இரு தொழிலாளா்கள் இறந்தனா்.
சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் ராணுவ குடியிருப்பு வளாகம் உள்ளது. அதன் பின்புறம் உள்ள கழிவு நீா்க் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் வெள்ளிக்கிழமை காலை அன்னை சத்யா நகா் ராஜாஜி சாலைப் பகுதியைச் சோ்ந்த கி.சந்தோஷ் (30), அதே பகுதியைச் சோ்ந்த கா.ராஜா (40), ரா.வெங்கடேஷ் (29), ரா.மணிவண்ணன் (29), ரா.பன்னீா் செல்வம் (25) ஆகியோா் ஈடுபட்டனா். அப்போது அதிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி 5 பேரும் மயக்கம் அடைந்தனா்.
இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள், தீயணைப்பு படையினருக்குத் தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த கோட்டை, திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்புப் படை வீரா்கள் விரைந்து வந்து, விஷவாயு தாக்கி மயக்கமடைந்து கிடந்த 5 பேரையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்தோஷ், ராஜா ஆகிய இருவா் உயிரிழந்தனா். மீதி 3 பேரும் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். இது தொடா்பாக கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.