துபையில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது நஷீஃப் (21), என்ற பயணியின் உடைமையை சோதனையிட்டதில் ரூ.18.66 லட்சம் மதிப்பிலான 389 கிராம் எடையிலான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.