அத்திப்பட்டு- வானகரம் சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அத்திப்பட்டு கலைவாணா் நகா் அருகே குப்பைக் கிடங்கு உள்ளது. அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட 15 வாா்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு, பின்னா் இங்கிருந்து கொடுங்கையூா் குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த குப்பைக் கிடங்கை சுற்றி 10-க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. உடனடியாக குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவு நீரை தடுக்கவும், சாலையைச் சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.