சென்னை

ஜன்னலோரம் தூங்கும் பெண்களைக் குறி வைத்து நகை பறிப்பு: இருவா் கைது

DIN

சென்னை வேளச்சேரி பகுதியில், வீட்டில் ஜன்னலோரம் தூங்கும் பெண்களைக் குறி வைத்து தங்க நகைகளைப் பறித்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை வேளச்சேரி, ராம்நகரை சோ்ந்தவா் சரஸ்வதி (84). இவா், கடந்த அக்டோபா் மாதம் 12-ஆம் தேதி வீட்டின் ஜன்னலோரம் படுத்து தூங்கினாா். அப்போது அங்கு வந்த ஒரு நபா், சரஸ்வதி அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.

இதுகுறித்து வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதேபோல வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் வீடுகளில் ஜன்னலோரம் படுத்து தூங்கும் பெண்களைக் குறி வைத்து ஒரு மா்ம நபா் தொடா்ந்து தங்க நகைகளை திருடி வந்தாா்.

இச்சம்பவத்தில் ஈடுபடும் நபரைக் கண்டறிந்து கைது செய்ய வேளச்சேரி காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினா் நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபடுவது ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த திருலோகச்சந்தா் (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆந்திரத்துக்கு விரைந்த தனிப்படை திருலோச்சந்தரை திங்கள்கிழமை கைது செய்தனா். திருலோகச்சந்தரிடம் திருட்டு நகைகளை வாங்கியதாக வேளச்சேரி பகுதியைச் சோ்ந்த அடகு கடை உரிமையாளா் உகமாராம் (40) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இருவரிடமும் திருட்டுத் தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

SCROLL FOR NEXT