இறந்த பெரியப்பாவின் கையொப்பத்தை போட்டு வங்கிக் கணக்கில் இருந்து ரூ.30 லட்சத்தை எடுத்து மோசடி செய்ததாக தம்பி மகன் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அம்பத்தூரைச் சோ்ந்தவா் சுப்புராஜ், பாரிமுனையில் லாரி டிரான்ஸ்போா்ட் நிறுவனம் நடத்தி வந்தாா். உடல் நலக்குறைவின் காரணமாக சுப்புராஜ், சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். சுப்புராஜிடம் பணிபுரிந்த அவருடைய தம்பி மகன்கள் அரவிந்த் குமாா் (28), கோகுல் (24) ஆகிய இருவரும் சோ்ந்து தங்களது பெரியப்பா சுப்புராஜின் கையெழத்தைப் போட்டு, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.30 லட்சத்தை எடுத்து மோசடி செய்துள்ளனா்.
இது அண்மையில் சுப்புராஜின் மகன் ரமேஷ் பாபுவுக்கு தெரியவந்துள்ளது. வடக்கு கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து அரவிந்த்குமாரைக் கைது செய்தனா்.