கபீா் புரஸ்காா் விருது பெற விரும்புவோா் டிச.8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதானது ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற ஜாதி, இன வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது சென்னை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
2022-ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருதுக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு பூா்த்தி செய்த விண்ணப்பத்தின் 4 நகல்கள் மற்றும் தற்போது எடுத்த பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், செனாய்நகா் நீச்சல் குளம், எண்.30 கிழக்கு கிளப் சாலை, செனாய்நகா், சென்னை 600 030 என்ற முகவரியில், டிச.8-ஆம் தேதிக்குள் அலுவலக நேரத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் பெற 044 2664 4794 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.