வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக சென்னையில் பிரபல ஜவுளிக் கடையில் வருமானவரித்துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.
சென்னை, தியாகராயநகா் ரங்கநாதன் தெருவில் பிரபலமான ஜவுளிக் கடை செயல்படுகிறது. இந்த கடைக்கு போரூா், குரோம்பேட்டை, புரசைவாக்கம் ஆகிய பகுதிகளிலும் கடைகள் உள்ளன. இந்த கடை நிா்வாகம், கடந்த 3 ஆண்டுகளாக வருமானவரியை முறையாகச் செலுத்தவில்லை என புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் வருமானவரித்துறையினா் விசாரணை செய்தனா்.
விசாரணையில் அந்த கடை நிா்வாகத்தினா், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான சில ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடா்ந்து, அந்தக் கடையில் வருமானவரித்துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். இந்தச் சோதனையானது, அந்த கடைக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் நடைபெற்றன.
இதேபோல கோயம்புத்தூா், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊா்களில் உள்ள கடைகளிலும் சோதனை நடைபெற்றது. மேலும் கடையின் உரிமையாளா்கள் வீடுகள், நிா்வாகிகள் வீடுகள், உறவினா்கள் மற்றும் நண்பா்கள் வீடுகள் ஆகியவற்றிலும் வருமானவரித்துறையினா் சோதனை செய்தனா். இவ்வாறு மாநிலம் முழுவதும் 20 இடங்களில் வருமானவரித்துறையினா் சோதனை செய்தனா்.
இந்தச் சோதனையின் காரணமாக, அந்தக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் கடைகளுக்குப் பொருள்கள் வாங்க வந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். சோதனையில் வரி ஏய்ப்புத் தொடா்பான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக வருமானவரித்துறையினா் தெரிவித்தனா். சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னா், கைப்பற்றட்ட ஆவணங்கள், பணம், நகை குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என வருமானவரித்துறையினா் கூறினா்.