சென்னை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

DIN

பதினோரு வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்தவா் ரவி (58). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாப்பூா் மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனா்.

கடந்த 2018 -ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணை சென்னையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, ரவி மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்படுகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT