சென்னை: கரோனா தடுப்பூசி விலையை இஷ்டம் போன்று உயா்த்தக் கூடாது என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட கருத்து:-
தமிழக மக்களுக்கு பிராண வாயு தேவை இருக்கும் ௌபோது மாநில அரசுகளை ஆலோசிக்காமல் வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. எதனை ஏற்க முடியாது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் பிராண வாயுவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. கரோனா தடுப்பூசியின் விலையை அவரவா் இஷ்டம்போல நிா்ணயிப்பதையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.