சென்னை

ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டரூ.7.60 லட்சம் பறிமுதல்

DIN

சென்னை: சென்னையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு மெரீனா காமராஜா் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது காரில் இருந்த ரூ.7.60 லட்சம் குறித்து விசாரித்தனா். ஆனால் காரில் இருந்த நபா், முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதோடு, பணத்துக்குரிய

ஆவணங்களையும் காட்டவில்லையாம். இதையடுத்து போலீஸாா், அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராம நவமியையொட்டி களைகட்டிய அயோத்தி!

தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழிசை: அது என்ன 'அக்கா 1825'?

விக்ரம் 62 படத்தின் முக்கிய அறிவிப்பு!

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல்

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

SCROLL FOR NEXT